search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர்கள் வேலைநிறுத்தம்"

    டாக்டர்கள் போராட்டம் காரணமாக நாமக்கல் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவு டாக்டர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். #DoctorsStrike
    நாமக்கல்:

    மத்திய அரசு டாக்டர்களுக்கு வழங்குவதைபோல் தமிழக அரசு டாக்டர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் மற்றும் பணப்படிகளை வழங்கிட வலியுறுத்தி அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள் இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்லில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மொத்தம் 70 டாக்டர்கள் பணிபுரிகிறார்கள். இதில் புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவில் பணிபுரியும் டாக்டர்கள் அனைவரும் இன்று பணிகளை மேற்கொள்ளவில்லை.

    சிகிச்சை பெறுவதற்காக காலையில் வரிசையில் நின்று ஓ.பி.சீட் வாங்கிக்கொண்டு வந்த நோயாளிகள், புறநோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் யாரும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். டாக்டர்களின் அறை வெறிச்சோடி காணப்பட்டது.

    இருப்பினும் டாக்டர்களின் வருகைக்காக அங்கு நோயாளிகள் காத்திருந்தனர். ஆனால், காலை 10.30 மணியை தாண்டியும் டாக்டர்கள் யாரும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு வராததால் என்ன செய்வது? என தெரியாமல் சிரமம் அடைந்தனர்.

    புறநோயாளிகள் பிரிவு டாக்டர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து ஆஸ்பத்திரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதுபோல் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் புறக்கணிப்பு செய்தனர். ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 21 டாக்டர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் விடுப்பில் உள்ளார். மற்ற 20 டாக்டர்களும் பணிக்கு வந்திருப்பதாக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

    பணிக்கு வந்திருந்த டாக்டர்கள் வழக்கம்போல் அனைத்து வார்டுகளிலும் உள்ள உள்நோயாளிகள் பிரிவிலும் மற்றும் அவசர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர்கள் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் புறக்கணித்தனர்.

    இந்த நிலையில் புறநோயாளிகளின் வருகை வழக்கத்தைவிட குறைந்த அளவில் காணப்பட்டது. வழக்கமாக காலை நேரங்களில் நூற்றுக்கணக்கான புறநோயாளிகள் நீண்ட வரிசையில் சிகிச்சைபெற காத்திருப்பார்கள். புறநோயாளிகளுக்கு டாக்டர் சிகிச்சை அளிக்காததால் புறநோயாளிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். #DoctorsStrike
    டாக்டர்கள் போராட்டம் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் புற நோயாளிகள் பிரிவு இன்று செயல்படாததால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிக்கு ஆளானார்கள். #DoctorsProtest
    நாகர்கோவில்:

    தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு மத்திய அரசில் பணிபுரியும் டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு இன்று ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

    குமரி மாவட்டத்திலும் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    டாக்டர்கள் போராட்டம் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் புற நோயாளிகள் பிரிவு இன்று செயல்படவில்லை.

    இதனால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிக்கு ஆளானார்கள்.

    குமரி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் மாவட்டம் முழுவதும் உள்ள சுகாதார மையங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டது.

    9 அரசு ஆஸ்பத்திரிகள், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளும் இன்று முழுமையாக செயல்படவில்லை. ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் இன்று புற நோயாளிகள் பிரிவுக்கு டாக்டர்கள் செல்லவில்லை.

    காலை 6 மணிக்கே வந்த நோயாளிகள் டாக்டர்கள் இல்லாததால் சிரமத்திற்கு ஆளானார்கள். இதையடுத்து பயிற்சி டாக்டர்கள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 100 பயிற்சி டாக்டர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். #DoctorsProtest
    சேலம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்தனர். #DoctorsProtest
    சேலம்:

    அரசு டாக்டர்கள் காலமுறை ஊதியம் மற்றும் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பல கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லை என்றும் புகார் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் 4-ந் தேதியான இன்று ஒரு நாள் தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் வெளி நோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடபோவதாக அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதன்படி அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

    இதையொட்டி சேலம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி, ஓமலூர், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், வாழப்பாடி உள்பட பல பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் பிரிவை அரசு டாக்டர்கள் புறக்கணித்தனர்.

    ஓமலூர், மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவை டாக்டர்கள் முற்றிலும் புறக்கணித்ததால் காய்ச்சல், தலை வலிக்கு கூட சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்தனர். இதனால் சில அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவு வெறிச்சோடி காணப்பட்டது.

    சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்களை வைத்து புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதனால் காய்ச்சல், தலைவலி உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பலர் சிகிச்சை பெறாமல் திரும்பி சென்றதுடன் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சென்றனர். இதனால் தனியார் ஆஸ்பத்திரிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

    இது குறித்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல முறை போராட்டம் நடத்தியும் அரசு கண்டு கொள்ளவில்லை. இதனால் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து இன்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக சங்க தலைமை நிர்வாகிகள் முடிவுபடி போராட்டம் தீவிரம் அடையும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    ஜனநாயக தமிழ்நாடு டாக்டர்கள் சங்கத்தினர் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. #DoctorsProtest
    நோயாளிகளின் அவதியையும் மருத்துவர்களின் பணி நலனையும் மனதில் கொண்டு போராட்டம் நடத்தும் மருத்துவர்களை அரசு அழைத்துப்பேசி உரிய தீர்வுகாண வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார். #DoctorsStrike #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு அதை கண்டுகொள்ளாததால் இன்று மாநிலம் முழுக்க புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை என்ற போராட்டத்தை அறிவித்துள்ளது அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு.

    இந்த போராட்டம் இதே மாதத்தில் மேலும் 4 நாட்கள் நடக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி தலைமை மருத்துவமனை வரை நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட வாய்ப்பு உள்ளது.


    எனவே நோயாளிகளின் அவதியையும் மருத்துவர்களின் பணி நலனையும் மனதில் கொண்டு போராட்டம் நடத்தும் மருத்துவர்களை அரசு அழைத்துப்பேசி உரிய தீர்வுகாண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #DoctorsStrike #TTVDhinakaran
    தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். 18,600 அரசு மருத்துவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். #DoctorsStrike
    சென்னை:

    தமிழகம் முழுவதும் நாளை அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.

    அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை மாவட்ட கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பெருமாள் கூறி இருப்பதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வின்றி தமிழக அரசு டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் அரசு டாக்டர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சருடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. தீபாவளி வரை காத்திருக்குமாறு கூறினார்கள். இருப்பினும் எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை.

    எனவே நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். 18,600 அரசு மருத்துவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். புறநோயாளிகளின் சிகிச்சையை முற்றிலுமாக நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் 7-ந்தேதி வரை கூட்டங்களை நடத்துவது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. 8-ந்தேதி முதல் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டாக்டர்கள் போராட்டம் தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


    தமிழ்நாடு அரசாங்க மருத்துவர்கள் சங்கம் ஊதிய உயர்வு, பணி உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைக்களுக்காக வேலை நிறுத்த போராட்டம் செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த கவலை அளிக்கிறது.

    முதல்-அமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் அரசு மருத்துவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ இடங்களை காப்பாற்ற வேண்டும்.

    நாடு முழுவதும் ஏறத்தாழ 6000 முதல் 10000 மருத்துவ பட்ட மேற்படிப்பு புதிய இடங்களை மத்திய அரசு உருவாக்கி உள்ள நிலையில் தமிழக மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான இடங்களை அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் இழந்து விடக்கூடாது என்பதற்காக வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ள அரசு மருத்துவர்களை அழைத்து தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DoctorsStrike
    தேசிய மருத்துவ கமி‌ஷன் மசோதாவை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் 750 தனியார் ஆஸ்பத்திரிகளில் சுமார் 3 ஆயிரம் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    தேசிய மருத்துவ கமி‌ஷன் மசோதா இன்று (சனிக்கிழமை) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

    இந்த மசோதாவில் மக்களையும், மருத்துவ துறையையும் பாதிக்க கூடிய பல்வேறு அம்சங்கள் உள்ளன. இதை கண்டித்து ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    இன்று தாக்கல் செய்யப்படும் மசோவை கண்டித்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை தேர்வு தலைவர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

    இது குறித்து அவர் மேலும் கூறியதாவது.-

    இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு மத்திய அரசால் தேர்வு செய்யப்படும், 25 பேர் கொண்ட தேசிய மருத்துவ கமி‌ஷன் குழு அமைக்கப்படும்.

    இக்குழுவில் 5 டாக்டர்களும், மருத்துவத் துறையை சாராதவர்களும் இடம் பெறுவர். முன்புள்ள அமைப்பில், மாநிலத்துக்கு பலர் என மொத்தம் 300 பேர் உறுப்பினராக இருந்தனர். மருத்துவம் சாராதவர்கள் மருத்துவமனைகள், டாக்டர்கள், மருத்துவ கல்லூரிகளை கண்காணிப்பர் என்பது சாத்தியமற்றது.

    இது போன்ற குழுக்களால், தரமற்ற மருத்துவ கல்லூரிகள், மாணவர்கள் சேர்க்கையில் தவறுகள், தரமற்ற மருத்துவர்கள் உருவாக வழிவகுக்கும்.

    அலோபதி மருத்துவர்கள் அல்லாத ஹோமியோபதி, சித்தா, யுனானி, ஆயுர்வேதிக் மருத்துவர்களுக்கு ஆறு மாத பயிற்சி வழங்கி அலோபதி சிகிச்சை வழங்க திட்டமிட்டுள்ளனர். இதனால் போலி மருத்துவர்கள் வருவாக வாய்ப்பு உள்ளது.

    மக்களுக்கான சிகிச்சையிலும் பிரச்சனை ஏற்படும். எனவே இந்த மசோதாவை கண்டித்து இன்று அகில இந்திய அளவில் ஒரு நாள் தனியார் ஆஸ்பத்திரிகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலை நிறுத்த போராட்டத்தில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள 750-க்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகள் பங்கேற்று உள்ளன. சுமார் 3 ஆயிரம் டாக்டர்கள் பணிக்கு செல்லவில்லை.

    இதனால் பல இடங்களில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எனினும் அவசரக்கால அறுவை சிகிச்சைகள், மகப்பேறு சம்மந்தமான அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது.

    தனியார் ஆஸ்பத்திரிகள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வழக்கத்துக்கு மாறாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. #DoctorsStrike

    ×